ACMC News
“பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!
அநியாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரின் விடயத்தில் தலையீடு செய்து, அவருக்கு நீதி பெற்றுக் கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பேருவளை, தர்கா நகரில், கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹஷீப் மரிக்காரின் விடுதலை…
“ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்” – புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததென்றும், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இதைவிட பாரிய வெற்றிகளைப் பெற முடியும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், வேப்பமடுவில் நேற்று (15) இடம்பெற்ற, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய…
‘விசாரணைகளின் பெயரால் என் மீது அரசியல் பழிவாங்கல்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செவ்வி!
52 நாள் அரசியலமைப்புக்கு எதிரான சட்டவிரோத ஆட்சிக்கு ஆதரவளிக்காமையும், எமது கட்சியின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலுமே, விசாரணைகளின் பெயரால் என்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கான சதிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியுடன் கைகேர்த்தமைக்கான காரணம் என்ன? பதில்:- அகில இலங்கை மக்கள்…
“யார் அமைச்சராவதென்பது எமது தீர்மானத்திலேயே உள்ளது” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பதான நிலைமை சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று மாலை (01) வவுனியா, பட்டாணிச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “மக்களின் ஆணையை…
இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை..!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..! தியாகத் திருநாளின் படிப்பினைகளில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இலக்குகள் வெற்றிகொள்ளப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறைதூதர் இப்றாஹிம் நபியின் தியாகத்தை, இறைவன் முழுச் சமூகத்திற்கும் மார்க்கமாக்கியுள்ளதாக இஸ்லாம் போதிக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு…
“சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!
அரசியல் ரீதியாக பிரிந்திருந்ததனாலும் ஒற்றுமையீனத்தினாலுமே புத்தளத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் நமக்கு எட்டாக்கனியாகியதாகவும், இம்முறை எப்படியாவது அது கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அலி சப்ரி ரஹீம், ஆப்தீன் எஹியா, முஸம்மில் ஆகியோரை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று மாலை (30) நடைபெற்ற…
“இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி” – ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று மாலை (29) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலாவது இல்லாமல் செய்ய வேண்டுமென்று கடந்த காலங்களிலும் சூழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன….
“சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கியதாக பிழையான குற்றச்சாட்டு” – ஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில், இன்று மாலை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “சஹ்ரானுக்கும் அவருடன் இணைந்தவர்களின் தற்கொலைத் தாக்குதல்…
“அரசாங்கத்தின் காட்டமான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும்” – கன்னி உரையில் பி.எம்.சிபான்!
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி, அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சி, இன வேறுபாடுகளுக்கு அப்பால், சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைமைத்துவம் என்ற அடிப்படையில், அரசாங்கத்தின் இவ்வாறான காட்டமான நடவடிக்கைகளை எதிர்த்து, குரல் கொடுக்கும் பணியில், இந்த சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினராகப் பதவியேற்ற பி.எம்.சிபான் தெரிவித்தார். கல்முனை…
“யாரினது கதைகளையும் கேட்கும் அரசியல்வாதி நானல்ல” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!
யாரினது கதைகளையும் கேட்டு அரசியல் செய்யும் நோக்கம் எனக்கு ஒரு போதும் கிடையாது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சம்மான்கார குடும்ப தலைவர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான அமீர் அலிக்கும் இடையிலான சந்திப்பு, எம்.எம்.இர்ஸாத் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, “ “அமீர் அலி ஆட்களின் கதை கேட்கின்றார்” என்று தேர்தல்கள் வரும்போது ஒரு கதை…
“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று (28) ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, வன்னி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு மொட்டுக் கட்சியினரின் தேர்தல் அடாவடித்தனங்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. வெளிமாவட்டத்திலிருந்து வேட்பாளர்களை களமிறக்கியதால் வந்த வினையே இது….
“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம்” – விசாரணையின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம். நேரத்தையும் காலத்தையும் இனியும் நாம் வீணடிக்க முடியாது” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில், இன்று (27) இடம்பெற்ற ஐந்து மணிநேர விசாரணை முடிவடைந்த பின்னர், வவுனியாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “அரசியல் ரீதியில் எம்மை வீழ்த்துவதே பொது எதிரியின் நோக்கம். நமது கடமைகளை சரிவரச் செய்வதில் கவனம் செலுத்துவோம். தூரநோக்குடனும் பொதுநல சிந்தனையுடனும்…
