ACMC News
முசலி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் – 2021 எதிர்ப்பின்றி நிறைவேறியது!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட முசலி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி, ஏகமனதாக நிறைவேறியது. முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் தலைமையில், இன்று காலை (19) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரான வாக்கெடுப்பின் போது, 15 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில், பொதுஜன பெரமுன காட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார். முசலி பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள்…
பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் காணிகளை எல்லையிடுதல் பிரச்சினைக்கு முஷாரப் எம்.பி யின் தலையீட்டில் தீர்வு!
பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்டவேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் விரைந்தார். அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எல்லையிடும் அதிகாரிகள் லாகுகல மற்றும் பொத்துவிலின் எல்லைப்படுத்தலுக்கான 2006 ஆம் ஆண்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எல்லைகளை அமைக்காமல், அதற்கு முரணான வகையில் எல்லைகளை அமைத்துக்கொண்டிருந்துடன், எந்தப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவில் எல்லைகளை அமைக்கின்றார்கள்…
சம்மாந்துறை விவசாயிகள் பாதிப்பு; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முஷாரப் எம்.பி முஷ்தீபு!
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன. இந்நிலையில், அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர், அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர். குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை…
සසුන එළිය කළ සංඝපීතෘන් වහන්සේ…
සසුන එළිය කළ සංඝපීතෘන් වහන්සේ… අපවත්වී වදාළ උතුරු පළාත් ප්රධාන සංඝනායක, මුලතිව් දිස්ත්රික් බල මණ්ඩල සභාපති, වැලිඔය, කිරිඉබ්බන්වැව ධර්මප්රනීතාරාම විහාරාධිපති, පොළොන්නරුවේ තිලකාලංකාර නායක ස්වාමීන්වහන්සේටනිවන් සුව ලැබේවා…! සමස්ත ලංකා මහජන කොංග්රසයේ සාතිශය සංවේගය. වන්නි දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී රිෂාඩ් බදියුදීන්.
“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று (03) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக் கொண்டிருக்கின்றேன். வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதி செய்து கொடுத்த காரணத்தை வைத்தே, என்னை…
“அஷ்ஷெய்க் முபாறக் மதனியின் மறைவு இஸ்லாமிய கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்” – பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்!
இன்று வபாத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவரும் இந்நாள் செயலாளரும் நாடறிந்த உஷ்தாதுமான அஷ்ஷெய்க் முபாறக் மதனி அவர்களின் மறைவு, இஸ்லாமிய கல்விச் சமூகத்திற்கு நிரப்ப முடியாத பேரிழப்பாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார். “எமது நாட்டின் முஸ்லிம் தேசியத்தின் மார்க்க சொத்தாக விளங்கியது மட்டுமல்லாமல், இஸ்லாமிய கல்விச் சமூகத்தின் கருவூலமாக விளங்கியவர் மர்ஹூம் முபாறக் மதனி அவர்கள். அகில…
All Ceylon Makkal Congress wishes all the best and excellent success for all the students sitting for the Scholarship Examination today!
All Ceylon Makkal Congress wishes all the best and excellent success for all the students sitting for the Scholarship Examination today 11th October 2020 and all those Advice Level students who are going to sit for their Examination tomorrow. Education is the real and long lasting assets that can not be destroyed by any force….
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அமைப்பாளரின் வாழ்த்துச் செய்தி!
இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பரீட்சைக்கு இலகுவாக முகம்கொடுத்து சித்தியடைய எனது பிரார்த்தனைகள். அப்துல்லாஹ் மஹ்ரூப் தேசிய அமைப்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
பரீட்சைக்கு தயாராகவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு!
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையையும் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் ஆகிய எம்.எஸ்.எஸ்அமீர் அலி தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் உயர்தர பரிட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…
“இறைவனின் அருள்பாலிப்பில் அபிலாஷைகள் நிறைவேறட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
அச்சம் நிறைந்த கடினமான சூழலில், நாளை (12) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் எழுதவிருந்த இப்பரீட்சை, இப்படியான சுகாதாரக் கெடுபிடிகள் நிலவும் காலத்தில் நடைபெறுகிறது. கொரோனாவின் பீதி நீங்கி, சுதந்திர மனநிலையில் மாணவர்கள் பரீட்சை எழுத வேண்டும் என்பதற்காகவே, ஒக்டோபர் வரை பின்போடப்பட்டது. எனினும், பயம் நிறைந்த சூழலிலே எமது…
கனேடிய தூதுவருடனான சந்திப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் (05) கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். நாட்டில் எதிர்நோக்க நேர்ந்துள்ள கொரோனா வைரஸின் புதிய அச்சுறுத்தல்கள், அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள புதிய அரசியல் கலாசாரம் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பிலும் இச்சந்திப்பில் இருவரும் கலந்துரையாடினர்.
குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு!
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை – குவைத் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் ஆகியோரும் உடனிருந்தனர்.
