ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வோம் -அமைச்சர் றிஷாத்
இலங்கைக்குக் கிடைக்காமல் போன ஜீ.எஸ்.பி வரிச்சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இந்தச் சலுகையினை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிஷாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும், ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடத்தில் கருத்துரைக்கும்…
