Headlines

ad34@hFacMC

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்: கைத்தொழில், வர்த்தக அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி – பரந்தனில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மூடப்பட்டிருக்கும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு, வெளிநாட்டு சூழலியல் நிபுணர்கள் மற்றும் உள்நாட்டு சூழலியலாளர்கள் ஆகியோருடன் இன்று காலை (19) விஜயம்…

Read More

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, பிரதேச செயலகப் பிரிவிற்கான விசேட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார்  இந்தக் கூட்டத்தில் தந்த திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் நிலைய…

Read More

வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின்  புனரமைப்புப் பணியினை, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மது, இணைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தார்கள். அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா வேலனர் சின்னக்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் புதிதாக தோன்றப்பட்டுள்ள கிணற்றின் நிர்மாணப்…

Read More

சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

சம்மாந்துறை அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோருக்கு எழுத, வாசிக்க தெரியாமல் இருப்பது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டதோடு, நேற்று (17) அங்கு நேரடியாக சென்றும் பார்வையிட்டிருந்தார். அங்கு சென்று பார்க்கின்ற போது, அம்மாணவர்கள் அவ்வாறு குறை கூறும் அளவிற்கு இல்லை எனவும், அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டார். மேலும்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – கந்தளாய் பிரதேசத்தில் ஆரம்பம்!

51 வது, 52வது, 53வது, 54வது, 55வது, 56வது, 57வது, 58 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், கந்தளாய் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி மதார் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, கந்தளாய் பிரதேசத்தில் 07 மில்லியன் ரூபா…

Read More

அனுராதபுர மாவட்ட விகாராதிபதியை சந்தித்த முசலி தவிசாளர்!

முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட, காயக்குளி சிங்கள கம்மான விகாரையின் பொறுப்பாளரான விகாராதிபதி, அந்த மக்களின் நீண்டகால பிரச்சினையான பாதைகள் இன்னும் சில முக்கிய பிரசினைகள் தொடர்பாக முசலிப் பிரதேச சபை தவிசாளருடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், கலந்துகொண்ட முசலிப்  பிரதேச சபை தவிசாளர் சுபியான், இந்த மக்களின் பிரச்சினைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருடன் பேசி விரைவில் தீர்த்து தருவதாகவும் வாக்குறுதி வழங்கினார். விகாராதிபதியுடனான சந்திப்பில் மிகவும் பயனுள்ள நல்லபல விடயங்கள் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. …

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – 50 வது திட்டம் ஆரம்பம்!

கிண்ணியா கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பம்! கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில்.  கிண்ணியா மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கிண்ணியா பிரதான வீதியில் குட்டித்தீவில் கிண்ணியா கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் 4 மில்லியன் ரூபா செலவில் தடுப்புச்சுவர்…

Read More

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்” – அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று காலை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயத்தை திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உலக சந்தையில்,…

Read More

‘உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின்{China National Agriculture Wholesale Market Association (CAWA)} தலைவர் ஷின்ஜுன் மா  (Zengjun Ma) தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்று முன்தினம் (15)…

Read More

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் தவிசாளர் தாஹிர் கோரிக்கை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் ரிஷாட் படுகொலை தொடர்பான செய்தியானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சத்தை…

Read More

மாகாண சபை தேர்தலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்! “தாமதிக்கப்படும் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்”

எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல், எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் கூட நடைபெறுமா? என்ற சந்தேக சாத்தியங்கள் தென்படுவதாக கடந்த 11.10.2018 தேர்தல்கள் கமிஷன் தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்ட கருத்துக்கள், மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீறும் செயலாக கணிக்கப்படுகின்றது. அங்கு வெளியிடப்பட்ட கருத்தின்படி மாகாண சபைத் தேர்தல் புதிய தொகுதி வாரி தேர்தல் முறையிலா (50:50) அல்லது பழைய விகிதாசார முறையிலா என்பது பற்றி…

Read More

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

“உலகில் வேகமாக வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா வளர்ந்து வருகிறது. இப்பிராந்தியங்களின் மத்தியில் வர்த்தகத்தினை அதிகரிக்க, உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்நோக்கி செல்வதற்கு சார்க் நாடுகள்  பணியாற்றி வருகின்றன. மேலும், ஆசிய நூற்றாண்டை வடிவமைப்பதற்கு, ஆற்றல் மிகுந்த ஒரு பாரிய பங்களிப்பை சார்க் நாடுகள் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த 20% சதவீதமான வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் பங்கு 05% சதவீதமாக உள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…

Read More