Headlines

சுற்றுலா சென்ற 16, 17, 18 வயது யுவதிகள் தங்கல்ல கடலலையில் சிக்கினர்.




தங்கல்ல -குடாவெல்ல கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளம் யுவதிகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

பிரதேச வாசிகளின் முயற்சியில் அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளதகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

தங்கல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா வந்த இவர்கள் இன்று காலை குடாவேல்ல கடலில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அதன்போதே அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட யுவதிகள்  16, 17, 18 வயதுடையவர்கள் எனவும் போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *