Headlines

பதவியிலிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல்..!

அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வரலாற்று பதிவை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல் எனவும் இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்கள் என்றும் இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். இனி உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதி மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும்…

Read More

யார் இந்த மைத்ரி? இந்த வீரனின் தைரியம் லேசுப்பட்டதல்ல..

நூறுநாள் வேலைத்திட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில் அவரின் நிதானம் வெளிப்பட்டிருந்தது. அவர் ஆற்றிய உரையில் சமகால அரசியலில் சலசலப்புச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நிறைந்த புத்திமதிகளைக் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளாதவர் அல்ல நான். அதிகாரங்களைக் கையில் எடுக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாகவே அமைதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரியின் மேற்போந்த உரையில் இருந்து அவரின் நிதானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை புகழ்ந்த ஜே.வி.பி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்று ஜேவிபி தெரிவித்துள்ளது இதனை கொண்டு வந்த ஐக்கிய தேசியகட்சியே 40 வருடங்களின் பின்னர் அதனை நீக்கவேண்டும் என்று கோருவது வரவேற்கக்த்தக்கது என்று ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பாஸிஸ கொள்கைக்கு இட்டுசென்றுள்ளதாக குறிப்பிட்டார் அனுபவ ரீதியாக இதனை உணர்ந்தநிலையிலேயே மக்கள் அதனை விமர்சிக்க ஆரம்பித்ததாகவும் ஹேரத் தெரிவித்தார் இந்தநிலையில் நிறைவேற்று…

Read More

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கிடைத்தமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தச் சட்டத்தை செவ்வாய் கிழமை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீத அதிகாரங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. 1999 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்…

Read More

ஞானசாரவை குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு

கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார். வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில்…

Read More

19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது மகிந்த ராஜபக்ஸ இழப்பவை

–துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- 19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்னுமொரு தடவை ஜனாதிபதித் தேர்தலிற்கு போட்டி இட முடியாது போவதுடன் நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதி மீது கேள்வி எழுப்பலாம் என்ற நிலை கொண்டுவரப்படுவதன் காரணமாக இலங்கை ஜனாதிபதி மீது குற்றச் சாட்டுகளை முன் வைத்து நீதி மன்றம் செல்ல முடியுமாக இருக்கும். இவ் இரு காரணிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் சவாலானதும்,ஆபத்தானதாகவும் இருப்பதால், இவ்…

Read More

இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை, நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்து நேபாளத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி மேற்கொள்ளாதா என அனுர குமார திஸாநாயக்க வினவியுள்ளார். அதற்கு பதலளிக்கும்…

Read More

அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் அனுதாபம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் (74) இன்று (27.04.2015) காலமானார்கள். அன்னார் காலமானதை கேள்வியுற்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது அனுதாப செய்தியினை தெரிவித்துள்ளார். இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை…

Read More

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாட்டின் முன்னணியிலுள்ள கைத்தொழில் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது நாட்டின் நீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்தவும் வழிவகுக்கின்றது. குளோரின் விநியோகஸ்தர்களின் கருத்தின்படி: நாட்டில் முன்னிலையிலுள்ள இவ்வர்த்தகத்தை சர்வதேச தராதரத்துக்கு உயர்த்த முடியும். வடமாகாணத்தில் அமையப்பற்றுள்ள பரந்தன் இரசாயண தொழிற்சாலை (Paranthan Chemical Company) 1985ல் தனது செயற்பாடுகளை முற்றாக இழந்தமையால் நாட்டுக்குத் தேவையான இரசாயணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் இத்தொழிற்சாலையை மீள…

Read More

சந்திரிக்காவும் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார். TM

Read More

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்; சட்டம் வருகிறது

கடவுச்சீட்டில், அதன் உரிமையாளரது கைவிரல் அடையாளத்தைப் பதிவதை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று, இன்று திங்கட்கிழமை (27), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கடவுச்சீட்டொன்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியானவர், தனது கைவிரல் அடையாளத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் நிலையான மற்றும் காலவரையறையின்றிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

நேபாளிற்கு சென்றுள்ள இலங்கை இராணும் – பிரதமர் ரணில்

இலங்கை இராணுவத்தினர், நேபாளத்துக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்களுடைய இராணுவம், வேறு நாடொன்றுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் அமைதி காக்கும் படைக்கு, ஐ.நா.வின் ஊடாகவே எமது படையினர் இணைந்துகொள்ளப்பட்டனர். இராணுவத்தினரை வேறு நாடுகளுக்கு சேவைக்கு அனுப்பும் போது நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவது உலக சம்பிரதாயமாகும் என்றும் அவர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். இலங்கை படையினர், நிவாரண நடவடிக்கையை…

Read More