Headlines

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு




அரச மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அரச வைத்தியகள் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய அரசிடம் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபடப் போகின்றனர் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய அரசிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து 8 வாரங்கள் கடந்த நிலையில் அவை எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த அரச வைத்திர்கள் சங்கம். எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *