Headlines

சீனாவிடம் இருந்து கடந்த அரசாங்கம் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்தப்படும்: மங்கள சமரவீர




பீஜிங்கில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடம் இருந்து இலங்கையின் முன்னைய அரசாங்கம் பெற்ற பெருந்தொகை கடன் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசேடமாக பெறப்பட்டுள்ள இந்த கடனுக்கான வட்டி பற்றி மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

வெளிப்படை தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இலங்கையின் புதிய அரசாங்கம் இது தொடர்பாக கருத்துக்களை சீனாவுடன் பரிமாறிக் கொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *