Headlines

மத்திய மாகாணத்தில் வெளி மாணவருக்கு அனுமதி மறுப்பு




மத்­திய மாகாண தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் 2017 ஆம் ஆண்டு உயர்­கல்­வியை தொடர்­வ­தற்­காக விண்­ணப்­பித்த வெளி மாகாண மாண­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், இரத்­தி­ன­புரி மாவட்ட மாண­வர்கள் பெரிதும் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளாகி இருப்­ப­தாக பெற்றோர் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் உயர்­தரப் பிரி­வு­களில் கலை, வர்த்­தகப் பிரி­வுகள் மாத்­தி­ரமே போதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. விஞ்­ஞான, கணித பிரி­வு­களில் உயர்­கல்­வியைத் தொடர விரும்பும் மாண­வர்கள் மத்­திய மாகா­ணத்­திற்குச் செல்­கின்­றனர். தற்­போது, இம் மாண­வர்­க­ளுக்கு அங்கும் கத­வ­டைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதால், உயர்­கல்­வியைத் தொடர வழி­யின்றி மாண­வர்கள் அல்­லல்­ப­டு­கின்­றனர்.

எமது பிள்­ளைகள் க.பொ.த. (சா/த)தரப் பரீட்­சையில் சித்­தி­பெறும் வகையில் பல்­வேறு கஷ்­டங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்றோம். அவர்­களை எப்­ப­டி­யா­வது உயர்­நி­லைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்­ப­தற்­காக பெரு­ம­ளவில் பணத்­தையும் செல­வ­ழித்து உயர்­தர கல்வி வாய்ப்­புள்ள மத்­திய மாகாண பாட­சா­லை­களில் சேர்க்­கின்றோம்.

இம்­முறை வெளி மாண­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டு­வதால் எமது இரத்­தி­ன­புரி மாவட்ட தமிழ்­பேசும் மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்தை உண்டு பண்­ணி­யுள்­ள­தாக பெற்றோர் தெரி­விக்­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் சகல பிரி­வு­க­ளையும் கொண்ட உயர்­தர வகுப்­புக்­களைக் கொண்ட தமிழ்­மொழி மூலப் பாட­சாலை இல்லை. அத­னா­லேயே எமது பிள்­ளை­களை வெளி மாவட்­டங்­களில் இணைக்க வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது.

இலங்கை ஒரு சுதந்­திர நாடு என்ற வகையில், எமது பிள்­ளைகள் நாட்டின் எப்­பா­கத்­திலும் கல்­வியைக் கற்­றுக்­கொள்­ளவும், பரீட்­சை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கவும் உரி­மை­யுண்டு. அதனை இல்­லாமற் செய்­வது பொருத்­த­மற்­ற­தொரு விடயம் என்றும் பெற்றோர் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய உயர்­தரப் பிரி­வு­களைக் கொண்­ட­தொரு பாட­சா­லையை உட­ன­டி­ யாக அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப டல் வேண்டும். அது உட­ன­டி­யாக சாத்­தி­யப்­ப­டாத பட்­சத்தில் தற்­பொ­ழுது இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் உள்ள ஒரே­யொரு தமிழ்­மொழி மூல தேசியப் பாட­சா­லை­யான பலாங்­கொடை ஜெய்­லானி மத்­திய கல்­லூ­ரியில் கலை, வர்த்­தக, நவீன விஞ்­ஞான தொழில்­நுட்பம் போன்ற பிரி­வுகள் உள்­ள­துடன் விஞ்­ஞான, கணித பிரி­வு­க­ளுக்­கான வச­தி­வாய்ப்­புகள் காணப்­பட்டு வரு­கின்ற அதேநிலையில் ஆசிரியர் பற்றாக் குறை காணப்பட்டு வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.

எனவே, இரத்தினபுரி மாவட்ட மாண வர்களின் உயர் கல்விக்கு உதவும் முகமாக உடனடியாக சகல பிரிவுகளையும் கொண்ட தாக ஒரு பாடசாலையைக் கட்டியெழுப்பு மாறு பிரதேச பெற்றோர் வேண்டுகின்ற னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *