Headlines

மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சப்ரகமுவ மாகாணத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்குவது தொடர்பான முறுகல் நிலைக்கு தீர்வுகாணும் முகமாக இறக்குவானை பரியோவான் கல்லூரியில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிPவுகள் இல்லாத காரணத்தினால் அந்தப் பிரிவுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர். எனினும் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சப்ரகமுவ மாணவர்களை…

Read More

மத்திய மாகாணத்தில் வெளி மாணவருக்கு அனுமதி மறுப்பு

மத்­திய மாகாண தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் 2017 ஆம் ஆண்டு உயர்­கல்­வியை தொடர்­வ­தற்­காக விண்­ணப்­பித்த வெளி மாகாண மாண­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், இரத்­தி­ன­புரி மாவட்ட மாண­வர்கள் பெரிதும் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளாகி இருப்­ப­தாக பெற்றோர் கவலை தெரி­விக்­கின்­றனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் உயர்­தரப் பிரி­வு­களில் கலை, வர்த்­தகப் பிரி­வுகள் மாத்­தி­ரமே போதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. விஞ்­ஞான, கணித பிரி­வு­களில் உயர்­கல்­வியைத் தொடர விரும்பும் மாண­வர்கள் மத்­திய மாகா­ணத்­திற்குச் செல்­கின்­றனர். தற்­போது, இம் மாண­வர்­க­ளுக்கு அங்கும் கத­வ­டைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதால்,…

Read More

உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் 6 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் மேலும் அவற்றுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா…

Read More

1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடி – இராதாகிருஸ்ணன்

நுவரெலியா மாவட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மோசடியான முறையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று பரீட்சை மோசடிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேசிய அடையாள அட்டைகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 305 மாணவர்கள் கணித பிரிவிலும், ஏனையவர்கள் வர்த்தக பிரிவிலும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் 25…

Read More

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ; பாடசாலைகள் மூடப்படும் விபரம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரைமேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள்பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம்,நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகாவித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை,…

Read More

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கோரிக்கை

இந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடமொன்றிட்கு 4 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும், இதுவரை இந்த வருடத்திற்கு இரண்டு இலட்சம் மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார். மேலதிகமாக இரண்டு இலட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பாமல்இருப்பதாகவும்,எனவே துரிதமாக தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமாறும்…

Read More

உயர்தரப் பரீட்சை : 4 அதிகாரிகள் பணிநீக்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் பணியாற்றிய 4 கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள் நால்வரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணிபுரிய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

11 மாண­வர்கள் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு

க.பொ.த. உயர்­தர பரீட்சை மத்திய நிலை­யத்தில் தொழில்நுட்பவியல் பாடத்­திற்கு தோற்­றிய 11 மாணவர்களுக்கு இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்து வினாப்­பத்­தி­ரம் ஒன்று வழங்­கி­யமை தொடர்­பாக 11 மாண­வர்கள் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். வத்­து­காமம் கல்வி வல­யத்­தி­லுள்ள கண்டி, வலல மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்சை மத்­திய நிலை­யத்தில் ஒரு அறையில் பரீட்­சைக்கு சனிக்­கி­ழமை தொழில்­நுட்­ப­வியல் பாடத்­திற்கு தேற்­றிய 11 மாண­வர்­க­ளுக்கு இக்­கேள்விப் பத்­தி­ரத்தின் இரண்டாம் பகு­தியை இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்து வழங்­கி­யது தொடர்­பாக 11…

Read More

உயர் தரப் பரீட்சை குறித்து 40 முறைப்பாடுகள் : விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சையின்போது மோசடியில் ஈடுப்பட்ட மாணவர்கள் தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது. மேலும் பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைகடிகாரம் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சாத்திகளின் கைக்கடிகாரம்…

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்

இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர்.

Read More

தொலைபேசி + ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் வந்தால் A/L பெறுபேறு ரத்து

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத்…

Read More