Headlines

எட்டாவது சார்க் நிதியமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தானில் ஆரம்பம்




சார்க் அங்கத்துவ நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் எட்டாவது வருடாந்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று நடைபெறுகிறது.

பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில்  நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொள்வார்.

தெற்காசிய பிராந்திய வங்கித்துறை மற்றும் சுதந்திர வர்த்தகம் தொடர்பான விடயங்கள்; இந்த மாநாட்டில்கலந்துறையாடப்படவுள்ளன. இன்றைய கூட்டத்தில் சுங்க நடவடிக்கைகள் இரட்டை வரி தவிர்ப்பு,முதலீட்டு வாய்ப்புக்கள், வங்கித்துறை ஒத்துழைப்பு முதலான விடயங்கள் விடங்கள் விரிவாக கலந்துறையாடவுள்ளன.

மாநாட்டை முன்னிட்டு நேற்று (25)  நிதியமைச்சுக்களின் செயலாளர்கள் சந்தித்து பேசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *