Headlines

விளக்கங்களைக் கேட்பதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன்

-சுஐப் எம்.காசிம் – கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை அவர்களின் அழைப்பின்பேரில் இன்று காலை அங்கு சென்று தான் வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை (26/08/2016) தெரிவித்தார். எதிர்வரும் 29 ஆம் திகதியே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தன்னை அழைத்திருந்த போதும், அன்றைய தினம் தனக்கு பல வேலைப்பழுக்கள்…

Read More

கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு சண்டை நிறுத்தம்

தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், இடதுசாரி ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. இதன் காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அரசுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இந்த அரை நூற்றாண்டுகால சண்டையை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக கொலம்பியா அரசு தரப்பினரும், ‘பார்க்’ என்றழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளிகளும்…

Read More

எட்டாவது சார்க் நிதியமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தானில் ஆரம்பம்

சார்க் அங்கத்துவ நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் எட்டாவது வருடாந்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று நடைபெறுகிறது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில்  நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொள்வார். தெற்காசிய பிராந்திய வங்கித்துறை மற்றும் சுதந்திர வர்த்தகம் தொடர்பான விடயங்கள்; இந்த மாநாட்டில்கலந்துறையாடப்படவுள்ளன. இன்றைய கூட்டத்தில் சுங்க நடவடிக்கைகள் இரட்டை வரி தவிர்ப்பு,முதலீட்டு வாய்ப்புக்கள், வங்கித்துறை ஒத்துழைப்பு முதலான விடயங்கள் விடங்கள் விரிவாக கலந்துறையாடவுள்ளன. மாநாட்டை முன்னிட்டு…

Read More

கொழும்பு நடைமுறை மாநாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

கொழும்பு நடைமுறை மாநாட்டில் ஐந்து பிரதான விடயங்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார். அவர் நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தொழிலாளர்களின் ஆற்றல்களை கண்டறிதல், சிறப்பான தொழில்வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், தொழில் சந்தை ஆய்வு, அந்நிய நாட்டு செலாவணியை முறையாக கவர்ந்திழுத்தல் ஆகிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் கூறினார். கொழும்பு நடைமுறையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டமும்,…

Read More

பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மேல் திணிக்க முடியாது

நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மீது சுமத்தாமல் தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் ஐந்த மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதி கட்டடத் தொகுதியையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி….

Read More

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் (26) பாராளுமன்றுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

மன்னார் – விடத்தல் தீவ கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கண்ணாடியிலை படகு, ஜி.பி.எஸ் கருவி மற்றும் தங்கூசி வலை ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ஆஸி ஊடக செய்திக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – ஜனாதிபதி

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தியுள்ளார். மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற் குழுவின் உறுப்பினர் ஒருவரால், அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று மேற்கோற்காட்டி செய்தி வௌியிட்டிருந்தது. இந்நிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லை என, மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இன்னும்,…

Read More

ஐ.தே.க 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு: வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என…

Read More

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கையே காரணம்

முன்னைய அரசாங்கம் தமக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் உள்ளுராட்சி மன்றங்களின எல்லைகளை நிர்ணயம் செய்திருந்தது. அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருத்த யோசனைகள் கிடைத்ததும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (25) சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உறையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இந்த விடயத்தை குறிப்பிட்டார். உள்ளுராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

Read More

பற்சிகிச்சை நிலையங்களுக்கு உபகரணங்கள்

நாடு பூராகவும் உள்ள அரச பற்சிகிச்சை நிலையங்களுக்கு 360 மில்லியன் செலவில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்த உபகரணங்கள் வழங்கி வைப்பதன் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எக்ஸ்ரே இயந்திரங்கள், இரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்த பற்சிகிச்சை நிலையங்களுக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். மேலும், சகல வைத்தியசாலைகளிலும் பூரண வாய்சுகாதார மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு 3000 மில்லியன்…

Read More

பம்பலப்பிட்டி மாணவி கடத்தல், விடுவிக்க 75 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்படுகிறது

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி…

Read More