Headlines

பாகிஸ்தானின் இறையாண்மைக்கு சர்வதேச சமுதாயம் மதிப்பளிக்க வேண்டும் – சீனா




பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 21-ம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் நடத்தியது.

இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வரும் அமெரிக்கா எங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிவருகிறது என பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லியி,  ‘தீவிரவாதத்தை ஒழிப்பதிலும், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவும் பாகிஸ்தான் தீவிர அக்கறை காட்டி வருகிறது. இதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். பாகிஸ்தானின் எல்லைப்பகுதி மற்றும் அந்நாட்டின் இறையாண்மைக்கு சர்வதேச சமுதாயம் மதிப்பளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *