Headlines

கொஸ்கமவில் மின்சார வேலைகள் பூர்த்தி

கொஸ்கம, சாலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாரிய சேதத்தை சந்தித்த கொஸ்கம பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மின்சாரம் வழங்குவதற்கான தூண்கள் நடப்பட்டுள்ளதுடன் மின்சாரக் கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன

Read More

சர்வதேச கிரிக்கெட் பேரவை விபரங்கள் வௌியிடப்பட்டன

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் கொடுத்த நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவில் 12 நடுவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 2015/2016 ம் ஆண்டு பருவகாலத்தில் இடம்பெற்ற அனைத்து வகையான ஆட்டங்களில் 95.6 வீதமான…

Read More

பாகிஸ்தானின் இறையாண்மைக்கு சர்வதேச சமுதாயம் மதிப்பளிக்க வேண்டும் – சீனா

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 21-ம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வரும் அமெரிக்கா எங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிவருகிறது என பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லியி,  ‘தீவிரவாதத்தை ஒழிப்பதிலும், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவும் பாகிஸ்தான் தீவிர அக்கறை காட்டி வருகிறது. இதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். பாகிஸ்தானின் எல்லைப்பகுதி மற்றும்…

Read More

தெஹிவளையில் 6 மாடி புதிய பள்ளிவாசல்

-Mujeeb Ibrahim- கடந்த பல வருடங்களாக ஒரு பழமையான கட்டடத்தில் இயங்கிவந்த தெஹிவளை எபனீசர் வீதி பள்ளிவாயல் இப்போது விசாலிக்கப்பட்டு ஆறு மாடிகளை கொண்ட அழகிய அமைப்பில் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன. இதன்போது அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையொன்றில்தான் ஐவேளை தொழுகையும், வாராந்த ஜும்ஆ நிகழ்வும் நடைபெற்றுவந்தன. இந்த புதிய கட்டடத்தின் நிர்மாண செலவுகள் அனைத்தையும் தனி நபர் ஒருவரே பொறுப்பேற்றிருந்தார்! இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இந்த…

Read More

ஜனாதிபதி மாளிகை வனப்பை 40 ஆயிரம் பேர் பார்வை

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை இதுவரையிலும் (11.06.2016) 40ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Read More

இராணுவ தளபதி அனுதாபம்

சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தனதுஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

‘மக்கள் வசிக்கும் இடத்தில் ஆயுத களஞ்சியசாலை இனி இல்லை’

மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பு படைகளுக்காக ஆயுத களஞ்சியசாலைகளை அமைப்பதை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், சேதமடைந்த வீடுகள் தொடர்பில் முழுமையான விவரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றுமு; ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சீதாவாக்க பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

இலங்கையில் நில அதிர்வு எச்சரிக்கை

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 1000 கிலோ மீற்றர் தொலைவில் கண்டதத்தட்டு இயக்கவியல் செயற்பாட்டின் விளைவாக இலங்கையில் நில அதிர்வு ஏற்றபடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனிய பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், முன்னாள் உப வேந்தருமான அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மண்சரிவு அச்சுறுத்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

Read More

சாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு

கொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.

Read More