Headlines

சவூதி உதவியில் மருதானையில் குடும்ப நடைமுறை நிலையம் திறப்பு




இலங்கை இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் அமைத்துள்ள குடும்ப நடைமுறை நிலையமும், உடல்சார் சிகிச்சைப் பிரிவும் மருதானை பியதாச சிரிசேன மாவத்தையில் செப்டம்பர் 24ஆம் திகதி காலை திறந்து வைக்கப்படும்.

இஸ்லாமிய நிலையத் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான எம். எச். முஹம்மத் தலைமையில் நடைபெறும் இவ் வைபவத்தில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

சவூதி அரேபிய இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி அநுசரணையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *