Headlines

இந்த வருடம் தேர்தல் இல்லை!




அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (2) இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள காலஎல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என, பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *