Headlines

பனாமா ஆவணம்: ஆராய விசேட குழு

வெளிநாட்டிலுள்ள இரகசியக் கணக்குகள், சொத்துகள் தொடர்பான விவரங்களில்  வெளியிட்டுள்ள பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து சரியான உறுதிப்படுத்தல்கள் ஆராய்வதற்கு, அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

Read More

முன்னாள் போராளி பிரபாவும் கைது

புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக  அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Read More

காலிக்கு வராத சுக உறுப்பினர்கள் குறித்து விரைவில் தீர்மானம்

கட்சியின் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது, கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் – மஹிந்த

கிருலப்பனையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக, தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ஆதரவாளர்களால் நேற்றைய தினம் (1) கிருலப்பனையில் மேதினக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மகிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் தமக்கும், தமக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்…

Read More

குவைத்திலிருந்து 41,000 பேர் வௌியேற்றம்!

சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41,000 பேரை குவைத் இதுவரை வௌியேற்றியுள்ளது. இவ்வாறு வௌியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு 26,600 பேரும் 2016 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 14,400 பேருமாக மொத்தம் 41,000 பேர் வௌியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் வீசா காலாவதியானவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள்…

Read More

இந்த வருடம் தேர்தல் இல்லை!

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (2) இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள காலஎல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என,…

Read More

இன்றும் பல பிரதேசங்களில் மழை பொழியலாம்!

நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (2) பிற்பகல் மழையுடன் கடுமையான காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மின்னலால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

போலி தயாரிப்புக்கள்: சீனாவிற்கு முதலிடம்

சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து…

Read More

கட்டாரில் இலங்கையருக்கு 1 வருட சிறை

உத்தியோகபூர்வ ஆவணமொன்றை போலியாக தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையருக்கு டோஹா கட்டாரில் ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டோஹா கட்டாரிலுள்ள குற்றவியல் நீதிமன்றமே மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றதாக தெரிவித்து குறித்த இலங்கையரினால் குறித்த ஆவணம் கட்டாரிலுள்ள அரச திணைக்களமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஆராய்;ந்த நீதிமன்றம் குறித்த நபரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. குற்றவாளியை தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு…

Read More

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் (2) நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடரிபில் கருத்து தெரிவித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பை நீக்குவது உசிதமானதல்ல எனவும், ஏனைய அரச தலைவர்களைவிட பயங்கரவாதிகளின் எதிரியாக அவர் கருதப்படுவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது…

Read More

அமைச்சர் சரத் அமுனுகம ஜெர்மனிக்கு விஜயம்

விசேட செயற்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஜெர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார். சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் அமுனுகம இன்று (2) ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கின்றார். இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஒன்றில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலேயே அமைச்சர் அமுனுகம இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். ஜெர்மனியின் பிராங்பொர்ட் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. நகர அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான…

Read More