Headlines

லக்கல ஆயுத திருட்டின் பின்னணி என்ன?




லக்கல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி திருட்டு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துடன் சட்டவிரோத இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல் தொடர்புடைய கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதற்கமைய துப்பாக்கிகளை திருடிய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *