Headlines

இலங்கையிலிருந்து நாளை புறப்படும் முதலாவது ஹஜ் குழு




புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்படும் முதலாவது யாத்திரிகர்கள் குழு நாளை  புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளதுடன் இவர்களை முஸ்லிம் கலாசார பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் வழியனுப்பி வைக்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன் மூலம் புறப்படவுள்ள ஹஜ் குழுவினர் அமானத் டிரவல்ஸ், ஸாஹியா டிரவல்ஸ் மற்றும் எம்.டி.எஸ். டிரவல்ஸ் ஆகிய முகவர்கள் ஊடாகவே செல்வதாக அகில இலங்கை ஹஜ் பிரயாண இயக்குநர் சங்கத் தலைவரும் சேப்வே டிரவல்ஸ் அதிபருமான எம்.ஆர்.எம். பாறூக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *