Headlines

நிந்தவூர் ‘Y Two K’ பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

நிந்தவூர் ‘Y Two K’ பாலர் பாடசாலையின் விடுகைவிழா, அதன் முகாமையாளரான ஏ.எச்.எம்.லாபிர் தலைமையில், இன்றைய தினம் (28) மாலை கமு/கமு/அல் – பதுரியா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், கமு/கமு/ அல் – பதுரியா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி அப்துல் ஜப்பார், நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (27) கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு விஷேட உரை நிகழ்த்தியதுடன், முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நினைவுரை ஆற்றியிருந்தார். மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் M.S.S. அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி N.M….

Read More

“மர்ஹூம் Y.L.S.ஹமீட் அவர்களின் வாழ்வும் பணியும்” நினைவுப் பகிர்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் திரு.வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் “வாழ்வும் பணியும்” நினைவேந்தல் நிகழ்வு, நாளை சனிக்கிழமை 27.01.2024, பிற்பகல் 03.45 மணிக்கு, கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மன்னார், அகத்திமுறிப்பு, மர்ஹபா பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு!

மன்னார், அகத்திமுறிப்பு, அளக்கட்டு, மர்ஹபா பாலர் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (19) மாலை, பள்ளிபரிபாலன சபைத் தலைவர் சியாவுத்தீன் மௌலவி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து பெறுமதியான பரிசில்களையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான…

Read More

மன்னார், பி.பி பொற்கேணி, அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

மன்னார், பி.பி பொற்கேணி – அளக்கட்டு அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அலிகான் சரீப், முசலி பிரதேச சபை செயலாளர் நஜீம், மன்னார் வலய…

Read More

மன்னார், வேப்பங்குளம், அல்- அறபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

மன்னார், வேப்பங்குளம் – அளக்கட்டு, அல்- அறபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

மன்னார், பிச்சவாணிப நெடுங்குளம், அல் / ஹைரத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

மன்னார், பிச்சவாணிப நெடுங்குளம் – அளைக்கட்டு, அல் / ஹைரத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன்…

Read More

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு! 

ஸகாதுல் பவுண்டேஷனினால் மன்னார், விளாங்குளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) ஜும்ஆத் தொழுகையுடன் இடம்பெற்றது. ஸகாதுல் பவுண்டேஷனின் பணிப்பாளர் இஷாக் ஹஸன் அப்பாஸி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

Read More

மன்னார், மாந்தை கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு!

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார், மாந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19), மாந்தை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், 08 சமூக சேவைகள் அமைப்புக்களுக்கான உபகரணங்களையும் கையளித்தார். இந்நிகழ்வில், மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர், உதவிச் செயலாளர், மன்னார்…

Read More

“மறிச்சுக்கட்டி ஹமீது மரைக்காரின் (கலீபா மாமா) மறைவு மண்ணுக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஹமீது மரைக்கார் (கலீபா மாமா) அவர்களின் மறைவு மிகவும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில், “மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீது மரைக்கார், 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம், இஸ்மாயில்புரம், நியூ சிட்னி முகாமில் தங்கியிருந்த போது, அந்த முகாமுக்குத் தலைமைதாங்கி, அங்கிருந்த மக்களை சிறந்த முறையில் வழிநடாத்தினார். அதன் பின்னர் நியூ சிட்னி மக்களுக்கென தனியான மீள்குடியேற்ற…

Read More

‘பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம்”

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,…

Read More