Headlines

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில், இன்று (07) வயம்ப கூட்டுறவு கிராமிய வங்கிக் கட்டடத்தில் உள்ள ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமிய, வட்டார அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

“கல்வியில் கைதேர்ந்து பொறுப்புள்ள பிரஜைகளாக பிரார்த்திக்கின்றேன்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

உயர்தரப் பரீட்சை எழுதும் சகல மாணவர்களதும் அபிலாஷைகள் வெற்றிபெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாளைய தினம் (04) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மாணவர்களின் அடைவுமட்டம், பெற்றோர்களின் இலட்சியங்களை ஈடேற்ற உதவட்டும். கல்வியில் கைதேர்ந்து, பொறுப்புள்ள பிரஜைகளாக மாணவர்கள் வளர எனது பிரார்த்தனைகள். தொழில்நுட்ப உலகில் அதிகரிக்கும் சந்தைப்போட்டிகள் மற்றும் தொழில் சந்தைகளுக்குள் நுழைவதற்கான சவால்களை வெல்வதற்கு…

Read More