“தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர், தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வேண்டுகோள்!
தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை…
