“இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் விரும்புவோர் நிதானமாக சிந்தித்து வாக்களிக்கும் தேர்தல் இது” – கிண்ணியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும், மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.” சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில், இன்று மாலை (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில்…
