மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்பட்டுள்ள கொரோணா வைரஸ் தடுப்பு முகாமுக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபை கண்டனத் தீர்மானம்!
COVID-19 (கொரோணா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புணானை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும், 2020 / பிரதேச சபையின் 24 வது சபை அமர்வும் இன்று காலை (12) 10.20 மணியளவில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்…
