‘மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, இணைந்து பயணிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்’ – ஆப்தீன் எஹியா!
புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, நாம் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து கட்சிகளினதும் உயர்பீட உறுப்பினர்களை, அவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம் எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார். நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற, கரம்பை வட்டார இளைஞர் அமைப்பினருடனான…
