Headlines

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்க சதி”-தவிசாளர் தாஹிர் விசனம்

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அடியொற்றியே முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது வெற்றுக் குற்றாச்சாட்டுக்களும் பழி சுமத்தல்களும் சுமத்தப்பட்டு நெருக்குதல்கள் தொடர்கின்றன” இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் விசனம் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசசபைப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிப் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிந்தவூர்…

Read More

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரிலுள்ள 30 முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் சுமார் 600 மாணவ மாணவிகளுக்கு தரம் ஒன்றுக்கான பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைவான 300 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு  (15) நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிந்தவூரின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஆக்கமும்…

Read More

மறிச்சுக்கட்டி இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் சந்திப்பு

மறிச்சுக்கட்டி இளைஞர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து (16) தமது ஆதரவினை தெரிவித்த போது…

Read More

அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 14.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் இஸ்மாயில் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் றிப்கா, கோட்டக் கல்விப் பணிப்பாளர்அஹ்சாப், கோட்டக் கல்விப் பணிப்பாளர் கல்குடா ஜெவதனன், உதவி கல்விப் பணிப்பாளர் இஸ்மாயில், ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பெளஸ்டீன்,…

Read More

பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வு

பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த போது..

Read More

ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் ACMC முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புத்தளத்தில் (15) நடைபெற்றது.

Read More

தோப்பூரில் Digital Score board திறந்து வைப்பு!

இன்றைய தினம் (14) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தோப்பூரில் டிஜிடல் ஸ்கோர் போட்” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More

செம்மண்ணோடை அல் ஹம்றாவில் இல்ல விளையாட்டுப்போட்டி : மர்வா இல்லம் சம்பியன்

வாழைச்சேனை – செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தின் 7வது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (12) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.கே.ரகுமான், எம்.யூ.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். ஜவாஹிர் சாலி, ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்…

Read More

சர்வதேச ஈரவல தின நிகழ்வில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

வருடந்தோரும் பிப்ரவரி 2 யில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஈரவல தினத்தினையொட்டியதாக நேற்று (13) நிந்தவூர் கமு அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் “ஈர நிலங்களும் உயிர் பல்வகைமையும்” எனும் கருப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாடாட்டில் நடாத்தப்பட்ட இவ் வைபவத்திற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு நிந்தவூரின் பல இடங்களிலும் மரக்கன்றுகளையும் நட்டுவைத்தார். இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார…

Read More

ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தும் ஏன் இன்னும் இன ஐக்கியத்தை சீர் குழைப்பவர்கள் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் இந்த நாட்டின் இனவாதிகளின் இனவாத பேச்சுக்கள் மேலோங்கி இருப்பதை நாங்கள் காண்கின்றோம். இதேவேளை சில பௌத்த…

Read More

“அக்கினி அறிவுச் சவால்-2019”

சன சமூக அறிவியல் ஒன்றியத்தின் “அக்கினி அறிவுச் சவால்-2019” நிகழ்வு கடந்த (8) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஒன்றியத்தின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. க.பொ.த. உயர்தர பிரிவில் கணிதம் மற்றும் வணிக பிரிவுகளில் மாவட்ட ரீதியில் 1லாம் நிலையினை பெற்று நமது மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த நிந்தவூர் கல்வி கோட்ட மாணவிகளுக்கு சனசமூக அறிவியல் ஒன்றியத்தினால் தலா ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும்…

Read More