‘அமெரிக்க ஜி.எஸ்.பி (GSP) வசதியால் இலங்கைக்கு நன்மை’ அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!
-ஊடகப்பிரிவு- புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி புதுப்பிக்கப்பட்ட திகதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி ஆகையினால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான மீள் அதிகாரம் அளிக்கப்பட்ட அமெரிக்காவின் ஜி.எஸ்.பி ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்து, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு…
