Headlines

பொருளாதார வளர்ச்சியின்  முக்கிய அச்சாணியான கைத்தொழில் சமூகத்தை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு யாழ் நகரில் அமைச்சர் ரிஷாட்

நாட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…

Read More

வடக்கில் இருபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு

ஊடகப்பிரிவு யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கிலே ஆகக்குறைந்தது 20000 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடியவாறு கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களையும் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம் பெற்ற…

Read More

கிளிநொச்சியில் தானியக்களஞ்சியசாலை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பு.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகளின் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை மக்களின் பாவனைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (21) ஒப்படைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Read More

முல்லைத்தீவு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் சுயதொழில் மேற்கொள்வோருக்கான புதிய கடன் திட்டம் அறிமுகம் 

நிதியமைச்சின் கருத்திட்டத்தில் உருவான ‘என்டப்பிரைஸ் சிறீலங்கா’ எனும் திட்டத்தின் அடிப்படையில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் நடைமுறையின் அங்குரார்ப்பண நிகழ்வு நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரினால் இன்று (21) முல்லைத்தீவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More

அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக  இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும்  இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் (20) அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான்,…

Read More

மன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது? அமைச்சர் சம்பிக்க மன்னாரில் விளக்கம்

  ஊடகப்பிரிவு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவினால் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து  250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் கொண்டே மன்னார் மாவட்டத்தின்  தற்போதைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். றிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கிணங்க வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் ஒதுக்கியமைக்கும்  அமைச்சருக்கு தனது நன்றிகளை…

Read More

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; அமைச்சர் றிஷாட் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது மேன்முறையீட்டு நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இன்று (20) தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt   எனும் இலக்கத்திலான இந்த வழக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பத்மன்சூரசேன நீதிபதி அர்ஜூன ஒபபேயசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த…

Read More

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!

வியாபார வர்த்தக தகவல் இணைய முனையும் (SLTIP) நேற்று (20.07.2018) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையின் வியாபார தகவல்களை உலகின் பல பாகங்களிலிருந்தும் திரட்டி வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு இலங்கை வர்த்தக திணைக்களம் இந்த இணைய முனையத்தை (SLTIP) ஆரம்பித்துள்ளது. நாடுகளுக்கிடையிலான பொருட்களின் விலைகள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், சுங்கத்தீர்வைகள், வியாபார சட்ட, திட்டங்கள் சந்தையில் நுழைவதற்கான அனுமதியைப் பெறும் தகவல்கள் என்பவற்றை இந்த இணைய முனையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு இணையத்தின் மூலம்…

Read More

மட்டக்களப்பில் 3400 மலசல கூடங்களை அமைப்பதற்கு இந்திய அரசு உதவி பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஒப்பந்தம் கைசாத்து!!!

இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் இந்திய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு இந்திய அரசாங்கத்தினால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில்…

Read More

அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில்  இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது!

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை தொடர்பில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில்  இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது. இலங்கைக்கு  சாதகமான இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக  தமது கடமைகளை நேர்த்தியாக செய்த இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திண்ம வீதி டயர் (OTR)  ஏற்றுமதிக்கான மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வைக்கான …

Read More

வடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி. சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு.

நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட வடக்கு செயலணியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை, எவ்வாறாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட மாற்றுக்கட்சி அரசியல் வாதிகள் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும்  இந்த விடயத்தில் தாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை  என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்…

Read More

எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!!!

இலங்கையும், எகிப்தும் நீண்டகால நட்பு நாடுகளாகவும்,  நெருக்கமான உறவை கொண்டவையாகவும், வலுவான பொருளாதார உறவை வளர்ப்பவையாகவும் இருப்பதாக  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று மாலை (16.07.2018) எகிப்திய தேசிய தினவிழா நடைபெற்றபோது அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அமைச்சர்  மேலும் கூறியதாவது,  முன்னாள் அரச தலைவர்களான  ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மற்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் நெருக்கமான நட்பையும், இறுக்கமான இணைப்பையும் கொண்டு செயற்பட்டதோடு அணிசேரா…

Read More