“இன, மத, கட்சி பேதமற்ற அபிவிருத்திகள் தொடரும்” அப்துல்லா மஹரூப் எம்.பி
இன, மத, கட்சி பேதமற்ற அரசியல் அபிவிருத்தியை திருகோணமலை மாவட்டத்தில் எனது ஆரம்ப காலம் தொட்டு நடை முறைப் படுத்தி வருகிறேன் இன்றும் அதைத்தான் செய்து வருகிறேன். இனக் குரோதமற்ற சமாதான சூழலினை உருவாக்க திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் உறுதி பூண்டுள்ளார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். பதவிசிறிபுர பகுதியில் ஐந்து வீதிகளுக்கான கொங்ரீட் இடும் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,…
