Headlines

“சமூக சிந்தனை சிற்பிகளை கட்சி வேற்றுமைகளை களைந்து அழைக்கிறேன்” மக்கள் காங்கிரஸின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலாளராக என்னை நியமித்த கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளர் அமீர்அலி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த ஜவாத் அப்துர் ரஸ்ஸாக், தனக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்….

Read More

பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மக்கோனை பாடசாலைக்கு விஜயம்!

மக்கோனை ஸ்ரீ ஸம்புத்தராஜா வித்தியாலய அதிபரது வேண்டுகோளை ஏற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்று (04) பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இப்பாடசாலையானது 30% சிங்கள மாணவர்களையும் 70% முஸ்லிம் மாணவர்களையும் கொண்டியங்கக் கூடிய இந்தப் பாடசாலையில், நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி அதிபரால் ஹஸீப் மரிக்காரிடம் முன்வைக்கப்பட்டது. இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப், இது தொடர்பில் கலந்தாலோசித்து விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், பாடசாலையின்…

Read More

புதுகுடியிருப்பு முஸ்லிம் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட புதுகுடியிருப்பு வட்டாரத்தின், மன்/புதுகுடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. அத்துடன், கடந்த ஆண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரமும் இன்று அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,  மன்னார் பிரதேச…

Read More

அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டில் அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா நேற்று (03) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் இம்மானுவேல் அமரதுங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் பாராளுமன்ற…

Read More

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என அவர் தெரிவித்தார். யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) நிறுவனமும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி…

Read More

போகஸ்வெவ கிராம மக்களுடனான கலந்துரையாடல்!

கெபித்திகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களின் நீர், காணி, வீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில், அப்பிரதேச மக்களுக்கும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ARM.தாரிக், வீட்டுத்திட்ட அமைச்சின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரி (பொறியியலாளர்) என்போர் கலந்துகொண்டிருந்தனர்

Read More

விசினவ கிராமத்தின் குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில், நன்னீர் மீன் வளர்பை மேம்படுத்தும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீரின் ஆலோசனையில், குளியாப்பிட்டிய விசினவ பகுதியில் உள்ள 07 குளங்களுக்கு மீன் இட்டு வளர்ப்பது சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (27) மடலஸ்ஸயில் நடைபெற்றது. குளியாப்பிட்டிய பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளர் எம்.சி.இர்பான் தலைமையில்…

Read More

முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பொல தேர்தல் தொகுதியின் எலபடகம பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று (03), மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நஸீர் முன்னிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் பம்மன்ன கிளைச் சங்க தலைவர் நஸ்மிர் மற்றும் எலபடகம ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் சிராஸ்…

Read More

மக்கள் காங்கிரஸ் கல்குடா இளைஞரணியின் விளையாட்டு விழா இறுதி நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அணியினர் நடாத்திய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) இரவு ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அமைப்பால், பிரதேச இளைஞர்களின் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யவும், போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் அடிப்படையிலேயே கழகங்களுக்கிடையில் உதைப்பந்தாட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட சில இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (30-09-2018) கல்குடா தேர்தல் தொகுதிக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களின் நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய மக்கள் பணிமனை கிளைக் காரியாலயத்தை வாழைச்சேனையில் திறந்து வைத்ததுடன், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடுகளுக்கு…

Read More

எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களின் காணி உறுதிப்பத்திரம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

கண்டி மாவட்டத்தின், உடபலாத தேர்தல் தொகுதியில், எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களுக்கு பலவருட காலமாக இருந்து வந்த காணி உறுதிப்பத்திரம் சம்பந்தமான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், எகொட கலுகமுவ பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தில் ஒரு பகுதியாக, மக்கள் காங்கிரஸின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் ஏ.காதரினால் பிரதேச…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – கிண்ணியாவில் ஆரம்பம்!

41 வது, 42 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில்,  நகரசபை உறுப்பினர்களான நிசார்டீன், ஹாரிஸ், வட்டாரக்குழுத் தலைவர் ஹனீபா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, கிண்ணியா பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 41 வது வேலைத்திட்டம் – பெரியற்றுமுனை, கடற்கரை…

Read More