வடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி. சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு.
நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட வடக்கு செயலணியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை, எவ்வாறாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட மாற்றுக்கட்சி அரசியல் வாதிகள் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் இந்த விடயத்தில் தாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்…
