Headlines

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட தொடங்கஸ்லந்த கிளை உருவாக்கம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம். நஸீர் (MA) தலைமையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களின் ஏற்பாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த கிளை இன்று திங்கட்கிழமை (18) உருவாக்கம் பெற்றது. குருநாகல் மாவட்டம் ரிதீகம பிரதேசசபை தொடங்கஸ்லந்த கிராம உத்தியோகத்தர் பிரிவை மையப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச அபிவிருத்தி நலனுக்காக இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டமை…

Read More

பிரதி அமைச்சராக புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட புத்திக்க பத்திரன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இன்று காலை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.      

Read More

‘அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்’ என்.எம்.நஸீர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிட வேலைகளை மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும்  குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் நேற்று  (20) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன் போது மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாறு ரிதீகம மக்கள் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

Read More

‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பஹ்ரைன் இராச்சியம் பலமானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான பிராந்திய கேந்திர நாடாகத் திகழ்கின்றது. வளைகுடா சந்தையில்…

Read More

மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிரான எறிகணைகள் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்குமா?

-சுஐப் எம். காசிம்-  நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் சிதைந்து போன சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் இன்று வரைக்கும் மீள்குடியேற்றமே தடையாகவுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான பல கருத்தியல் தர்க்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண செயலணியும் இந்தத் தர்க்கக் கணைகளுக்கு இலக்காகத் தவறவில்லை. எனினும் எல்லாத் தர்க்கங்களும் இனவாத நதியிலிருந்து பிரிந்து பாயும் கிளை ஆறுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன. எந்த நல்லிணக்கத்துக்காக மீள்குடியேற்றம் அவசியப்படுகிறதோ அந்த அவசியத்தின் இருப்பை பலமிழக்கும் வகையிலேயே இந்தத் தர்க்கங்கள் முளைவிட்டுக் கிளை விடுகின்றன….

Read More