Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வவுனியா பிரதேசத்தின் வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல், வவுனியா, சூடுவெந்தபுலவு, பழயகுடிமனையின் உள்ளக வீதி கொங்ரீட் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.  அந்த வகையில், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், நகர இணைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, ஆசிரியர் உபைதுல்லா ஆகியோர் இன்று (07) அங்கு விஜயம் செய்து வீதி செப்பனிடும் பணிகளை பார்வையிட்டனர். அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல் காபட் இடப்பட்டுள்ள வவுனியா பாரதிபுரம்…

Read More

விருதோடை, நல்லாந்தழுவை பகுதிகளில் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு! 

புத்தளம், விருதோடை, நல்லாந்தழுவை பிரதேச  மக்களின் நீண்டகால கோரிக்கைக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கினால், விருதோடை, நல்லாந்தழுவை போன்ற பகுதிகளில்,பிரதேச சபை ஊழியர்களைக்கொண்டு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டன. (ப)  

Read More

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். திருமலை மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும்,  எதிர்காலத்தில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் வட்டாரங்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்…

Read More

‘ர‌ம‌ழானின் இறுதிப் ப‌த்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புக‌ளை பெற்றுக்கொள்ளும் வ‌கையில், ப‌ள்ளிவாய‌லுட‌ன் ந‌ம்மை இணைத்துக்கொள்ள‌ வேண்டும்’ அமைச்சர் ரிஷாட்!

ர‌ம‌ழானின் இறுதிப் ப‌த்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புக‌ளை பெற்றுக்கொள்ளும் வ‌கையில், ப‌ள்ளிவாய‌லுட‌ன் ந‌ம்மை இணைத்துக்கொள்ள‌ வேண்டும் என‌ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, நாம் மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ இந்த‌ வ‌ருட‌ ர‌ம‌ழான் எம்மை அடைந்து அல்ஹ‌ம்துலில்லாஹ்! இப்போது மிக‌வும் ம‌க‌த்துவ‌ம் பொருந்திய‌ இறுதிப்ப‌த்தை அடைந்துள்ளோம். அதில் நாம் மிக‌வும் ஈடுபாட்டுட‌ன் இறைவ‌னோடு ந‌ம்மை இணைத்துக் கொள்வ‌து அவ‌சிய‌மாகும்….

Read More

மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் நியமனம்!

சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்ததை அடுத்து ஏற்பட்ட குறித்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்னாள் உபவேந்தர் கலாநிதி, எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (06) முதல் அமுலாகும்…

Read More