Headlines

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால வெற்றிடமாக உள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், பொதுமைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் முயற்சியில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை!

கிண்ணியாவில் பெய்து வரும் கணமழையினைத் தொடர்ந்து ஜாயா வீதி, ஆலிம் வீதி, ஹிஜ்ரா வீதி, அண்ணல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் நேற்று இரவு (24) ஊர்மக்களுடன் இணைந்து களத்தில் நின்று இரவோடிரவாக நடவடிக்கை மேற்கொண்டார்.      

Read More

 பிரதேச சபை உறுப்பினர் ஜலீலினால் மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் சொந்த நிதியொதுக்கீட்டில், மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு ஒரு தொகுதி தளபாடங்கள்  இன்று (25) அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் தலைவியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட்- மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் வறுமையில் மூன்றாவதாக காணப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தற்போது வறுமை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சு பதவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை இரண்டு வருடத்தில் 8.3 வீதமாக குறைப்பதற்கு குறித்த அமைச்சின் பங்களிப்பு அதிகம் உள்ளது. கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி…

Read More