திருகோணமலையில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
இன விகிதாசாரப்படி, திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர், குறிஞ்சாக்கேணி, புல்மோட்டை ஆகிய மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார். மூதூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தை, கடந்த திங்கட்கிழமை (21) திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, “திருகோணமலை மாவட்டம், அதிக சனநெரிசலைக் கொண்ட மாவட்டமாகும். அதிக குடும்பங்கள்…
