Headlines

வடக்கு மீள்குடியேற்ற செயலணி தனது பணிகளை துரிதப்படுத்துகிறது!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி அபிவிருத்திக்கு பொறுப்பாளரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை இணைத்தலைவராகக் கொண்டு இயங்கி வரும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி தனது திட்டங்களைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலணி, மீள்குடியேற்றக் கிராமங்களில் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு முன்னேற்பாடாக வன்னியில் உள்ள கிராமங்களுக்கு, மீள்குடியேற்றச் செயலணியின் பணிப்பாளர், பொறியியலாளர் யாஸீனின் தலைமையிலான தொழில்நுட்பக் குழு விஜயம்…

Read More

‘சிங்கப்பூரில் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இஷாக் எம்.பி! 

-ஊடகப்பிரிவு- சிங்கப்பூர் ஜனாதிபதி லீகுவான்யூ 48 மணிநேரத்தில் இனவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தது போன்று இங்கும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். நீதித்துறை திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன் போது பிரதமரும் சபையில் பிரசன்னமாகியிருந்தார். மேலும், உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்கிறோம். கடந்த ஆட்சியில் அன்றிருந்த ஜனாதிபதியோ, அமைச்சர்களோ, எம்.பிக்களோ…

Read More

யாழ் மாநகர சபையின் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக கே.எம் நிலாம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், யாழப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக யாழ் மாநகர சபை முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களினால் நியமிகப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் நிலாம், இதன் மூலம், யாழ் மக்களுக்கு சிறந்த முறையிலான கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அத்துடன், இளைஞர்களின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான சகல வசதிகளையும்  நாம் மேற்கொள்வோம். அத்துடன், பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டுத்…

Read More

மக்களின் வாழ்வியல் தேவைகள் குறித்து கன்னி அமர்விலேயே கவனஞ்செலுத்திய பிரதேச சபை!

-எ.எம் றிசாத்- மன்னார் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு, கன்னி அமர்வாக நேற்று (10) இடம்பெற்றது. பேசாலையில் அமைந்துள்ள மன்னார் பிரதேச சபையின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த அமர்வுக்கு, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமை தாங்கினார். சபையின் செயலாளர் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர். இதன் போது, தம்மை அறிமுகம் செய்து கொண்ட உறுப்பினர்கள், தமது கன்னி உரையினை ஆற்றினர். அத்துடன் பிரதேச சபையின் கடந்த அமர்வின் அறிக்கை வாசித்து, திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது….

Read More

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை  பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். AISEX மற்றும் FASE ஆடைத் தொழிற்துறைக்கான எக்ஸ்போ கண்காட்சியின் 08வது பதிப்பின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்;. இந்நிகழ்வில்…

Read More

‘அமைச்சர் ரிஷாத்தின் சேவையின் பிரதிபலனே வன்னியில் 04 சபைகள் கிடைத்தது’ தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு!

-பரீட் இஸ்பான்- நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னியில் 4 சபைகளின் தவிசாளர்களையும் 2 பிரதித் தவிசாளர்களையும் 66 உறுப்பினர்களையும் (மன்னார் – 34, வவுனியா 20, முல்லைத்தீவு 12) பெற்று வன்னியிலே மாபெரும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கியமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் சேவையின் வெளிப்பாட்டுக்கான அடையாளமே என மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!

-ஊடகப்பிரிவு- தீப்பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளை நீக்கும் வகையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின் போது, சில முன்னேற்றகரமான தீர்வுகள் கிடைக்கப்பெற்றதாக தாக அந்தச் சங்கத்தின் தலைவர் பி.டி.ஆர்.ராஜனும், செயலாளர் கே.ஏ.எஸ்.ஹைதர் அலியும் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்புகொண்டு, தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய இரசாயனப்பொருட்களான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சிவப்பு பொசுபரஸ் ஆகியவற்றின் இறக்குமதியில், பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளை நீக்கித்தருமாறு விடுத்த…

Read More