Headlines

கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்!

-முர்ஷிட் கல்குடா- கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை இன்று வியாழக்கிழமை (03) கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் பொறுப்பேற்றனர். இதன்போது கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர் வஜித் விஜிதமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் துலிப் வேத ஆராய்ச்சி, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தங்களது கடமைகளை பொறுபேற்கும் நிகழ்வு, கொழும்பு – 03இல் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்…

Read More

‘தடைகளைத் தகர்த்தெறிந்தே வன்னியில் 04 சபைகளைக் கைப்பற்றினோம்’ முசலிப் பிரதேச சபை வரவேற்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- மன்னார், முசலிப் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாது தடுப்பதிலும், அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை தட்டிப்பறிப்பதிலும் பல கட்சிகள் தீவிரமான சதி முயற்சிகளில் ஈடுபட்ட போதும், அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இறைவனின் உதவியினால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததாக மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை…

Read More

மன்னார் மாந்தை கிழக்கில் மாதிரிக் கிராமம்!

-ஊடகப்பிரிவு- மன்னார், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வீடமைப்பு அதிகார சபையினால் 25 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம்  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மகாலிங்கம் நந்தனின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் கடந்த உள்ளுராட்சி மன்றத்  தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டி தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தவிசாளர் மகாலிங்கம் நந்தனினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது வேலைத்…

Read More

“தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுடன் கடந்து வந்த தொலை தூர அரசியல் பயணத்தில் முதன் முதலாக இளைஞர்களான உங்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள் அனைத்திற்கும் பதிலளிக்கின்ற ஒரு திறந்த கேள்வி பதில் நிகழ்ச்சி மீறாவோடை அமீர் அலி கேட்போர்…

Read More

வட்டக்கண்டல் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நைசர் அவர்களினால்,  நீண்டகாலமாகப்  புனரமைக்கப்படாமல் இருந்த மன்னார், மாந்தை, வட்டக்கண்டல், காத்தங்குள வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த தேர்தல் காலத்தில் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள இந்த வீதியை புனரமைத்து தருமாறு வேண்டியிருந்தனர். அந்த மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவுசெய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.          

Read More

“அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவோம்” மன்னார் பிரதேச சபை விழாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

-சுஐப் எம்.காசிம்-   வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14  சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலைவாரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர்…

Read More