ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஐ.ரி. அஸ்மியின் தலைமையுரை!
-முர்ஷிட் கல்குடா- தமிழ் கிராமங்கள் நகர பிரதேசங்களுக்குச் சமமாக, அந்தப் பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக பொறுப்பேற்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நிறைவேற்றித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், இப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற ஆலோசனையும், வழிகாட்டலும் தந்த…
