தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில் நிறுவனத்தில் தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் ஆறிகாமம், தும்மலசூரிய யகம்வெல முஸ்லிம் மாகாவித்தியாலயத்தில் நேற்று (21) இடம்பெற்றது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான என்.எம் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம…
