Headlines

முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்சிக் கிளைகள் திறப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக் கிளைகள் ஆரம்பித்தல் மற்றும் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு, மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நேரடி வழிகாட்டலில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீனின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.   அந்தவகையில், பிச்சைவாணிபங்குளம், 04ஆம் கட்டை, வேப்பங்குளம், பி.பி.பொற்கேணி, எஸ்.பி.பொற்கேணி, அளக்கட்டு, அகத்திமுறிப்பு, புதுவெளி, கூழாங்குளம், தம்பட்டமுசலிக்கட்டு, சிலாவத்துறை, பூநொச்சிக்குளம், பண்டாரவெளி, மணற்குளம், இலந்தைக்குளம், வெள்ளிமலை,…

Read More

‘கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி. தெரிவிப்பு! 

-ஊடகப்பிரிவு- கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நம்பிக்கை பொறுப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த மாதத்தில் நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் பௌத்தமதத் தலைவர்கள் மற்றும்…

Read More

ஜனாதிபதியுடன், மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உள்ளிட்ட குழு பாகிஸ்தான் பயணம்!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் 78வது குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (22) பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் ஆகியோர் உட்பட  அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியுடன் நாளை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் அரசின் விஷேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்  இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.  

Read More

நீராவிப்பிட்டி மக்களுக்கான மின்னிணைப்பு வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற செயலணியூடாக மின்சார இணைப்புப் பத்திரத்தை, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர், முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் ரிபாய், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறிய கைத்தொழில் திட்டமிடல் ஆலோசகர் மொஹிடீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.      

Read More

‘மட்டக்களப்பில் எதிர்வரும் 05 வருடங்களுக்குள் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில், வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “செமட்ட செவன” வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில், 272 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதான நிகழ்வு விளாந்தோட்டத்தில், நேற்று முன்தினம் (19) மாலை இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More