Headlines

‘பாதுகாப்பு உயர்சபையை உடனடியாகக் கூட்டுங்கள்’ ஜனாதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவி, அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு, முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் குடியிருப்புக்கள் மீது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதுடன் முஸ்லிம்கள்…

Read More

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்! முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்!

-ஊடகப்பிரிவு- கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் தெரிவித்தார். பூதவுடலை சுமந்துகொண்டு கண்டி, திகன நகரத்துக்குக்குள் ஊர்வலமாக செல்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ள…

Read More

‘பாடசாலை கல்வி அபிவிருத்திக்கு சமூகத்தின் ஒற்றுமை முக்கியம்’ இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- கல்வி வளர்ச்சி மற்றும் கல்வி அபிவிருத்தி என்பவற்றுக்கு அதிபர், ஆசிரியர் போன்றவர்களது அர்ப்பணிப்புக்களை விட ஒரு சமூகத்தின் ஒற்றுமை மிக முக்கியம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் தெரிவித்தார். மடவளை மதீனா தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா, கல்லூரி அதிபர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்று முன்தினம் (03) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்….

Read More

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

-ஊடகப்பிரிவு- சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் மர்ஹூம் கியாஸின் மகனான முபாரக் அலி தனது தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் பெரும்பணி செய்தவர். மல்வானையைப் பிறப்பிடமாகக கொண்ட இவர், சமூகத்தின்பால் கொண்ட அக்கறையினால் சமூகப் பணியை மும்முரமாகச் செய்தவர். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஸ்வரின் இணைப்புச் செயலாளராக இருந்து, அவரது…

Read More