Headlines

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்” பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத்…

Read More

மஸ்தான் எம்.பியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அவரது ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More

வவுனியா தவசிகுளம் மற்றும் காத்தார்சின்னக்குளத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான வரதராஜ் துரைராஜ், வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து நேற்று முன்தினம் (04) தவசிகுளத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வேட்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், இணைப்பாளர் பர்ஹான், ஓய்வு பெற்ற…

Read More

சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு வஜயம்!

-முர்ஷித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, அம்பாறை, சவலக்கடை, சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு ஒன்று கடந்த சனிக்கிழமை (03) விஜயம் மேற்கொண்டது. இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முன்னாள் உபவேந்தர் கலாநிதி  இஸ்மாயில், மருத்துவ கலாநிதி பரீட் உள்ளிட்ட வர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, தாறுல் ஹிக்மா அரபுகல்லூரி, அல் ஹூதா ஜூம்ஆபள்ளி ஆகியவற்றின் புனர்நிர்மாணம்  மற்றும் குடியேற்ற கிராம மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்களும்…

Read More

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிரணிக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சம்மாந்துறை மல்கம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிருக்கான  கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். டாக்டர்.ஹஸ்மியா இங்கு உரையாற்றுகையில், எமது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. அதனைத் தட்டிக் கேட்கின்ற ஒரே…

Read More