முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் மறைவு முஸ்லிம் சமூதாயத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும் என்று அவரது மறைவு குறித்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் கவலை தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. நல்லதோர் அரசியல் பரம்பரையின் பின்புலத்தில் வாழ்ந்த, மர்ஹூம் மன்சூர் முஸ்லிம் சமூக அரசியலுக்கு முன்னோடியாக விளங்கியவர். கல்முனை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மருமகனான இவர,; அரசியலில் பல்வேறு பரிமாணங்களை வகித்தவர். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, மாவட்ட அமைச்சராக, வெளிநாட்டுத்…
