Headlines

பிரதி அமைச்சர் அமீர் அலி முன்னிலையில் முன்னாள் தவிசாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில், ஓட்டமாவடி 208 B/2 வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) பிரதி அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஒட்டமாவடி 208 B/2 வேட்பாளரான எச்.எம்.ஏ.கபூர் ஹாஜியார் மற்றும் மீராவோடை கிழக்கு வட்டார வேட்பாளரான முன்னாள் தவிசாளர் ஹமீட் ஆகியோர், பிரதி அமைச்சர் அமீர் அலியின் முன்னிலையில் வேட்புமனு பத்திரத்தில் கையொப்பமிட்டனர்.        

Read More

திருகோணமலை நகரசபை வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை நகர சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இன்று மாலை (17) இடம்பெற்றது. மூவின மக்களின் ஒத்துழைப்புடன், ஜமாலியா பிரதேசத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் தெரிவு மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.            

Read More

மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் திறப்புவிழா!

-ஊடகப்பிரிவு- அல்/புர்கான் நலன்புரி அமைப்பின் முயற்சியினால் மன்னார், மூர்வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பிரதேசவாசிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றனர்.              

Read More

“உண்மையும், நேர்மையும் இருப்பதனாலேயே மக்கள் எம்பக்கம் அணிதிரள்கின்றனர்” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட்…

-ஊடகப்பிரிவு- உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனைத் திறப்புவிழா நிகழ்வு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ்…

Read More