Headlines

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரியுங்கள். உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி…

-முர்ஷித்- நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தும் வேட்பாளரை அதிக வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதனூடாக உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்று மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமானஎம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பாடசாலையின் 22 வது ஆண்டு நிறைவும், மாணவர் வெளியேற்று நிகழ்வும் நேற்று முன்தினம் (11) வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More

வவுனியா மதீனா நகர் அல்/அக்ஸா முன்பள்ளி கலைவிழா!

-ஊடகப்பிரிவு- வவுனியா, மதீனா நகர், அல் / அக்ஸா சிறுவர் முன்பள்ளியின் 2017ம் ஆண்டுக்கான கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். அப்துல் பாரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.        

Read More

முள்ளிப்பொத்தானை மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- முள்ளிப்பொத்தானை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள், நேற்று முன்தினம் (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில், கட்சி போராளிகளின் பங்குபற்றுதலோடு, முன்னாள் மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரபின் காலத்திலிருந்து இற்றைவரை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில்…

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான அறிவித்தல்!

-ஊடகப்பிரிவு- மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில், இது வரை கட்சித் தலைமை எந்த இறுதியான முடிவையும் மேற்கொள்ளவில்லை. வேட்பாளர் தெரிவு இன்னும் நிறைவு பெறவும் இல்லை. இந்த சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்தப்பட்டு, இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அரக்கியால பாடசாலை மைதானம் புனரமைப்பு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், குருநாகல், அரக்கியால முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் இருந்த, அரக்கியால பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காக இருபது இலட்சம் ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

தொழில் முயற்சியாளர் விருது விழா!

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும், கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (11) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், தயா கமகே, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 22 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்…

Read More