Headlines

முன்னாள் கிழக்கு முதல்வர் மீண்டும் வர முடியாது- அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம். ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை மற்றும் செம்மண்னோடை கிராமத்தில் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலில் இருக்கும் வரை…

Read More

கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவிதிட்டத்தை ஆரம்பித்துவைத்த மொஹமட் பாயிஸ்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் இன்றைய தினம் ஆரம்பித்துவைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அலுவலகத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் தலைமையில் உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

Read More

கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் ஆரம்பம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவருமான  இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜிதபுர சந்தி முதல் கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மண் கிரயெல்ல அவர்களின் பணிப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹுமான் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் இணைப்பாளர் டாக்டர் ஷாபி சிகாப்தீன் பிரதேச…

Read More