சகோதரர் ரிசாத் பதியுதீனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!
அன்புள்ள சோதரனே ரிசாத் பதியுதீன்….அஸ்ஸலாமு அலைக்கும்! குலத்தின் கோமகனாய் ,வம்சத்தின் முதல் மகனாய், தங்கள் வாழ்வைச் செழித்தோங்கச் செய்யும் தலைமகனாய் நீ பிறந்த போது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி ஆனந்தப்பட்டவர்கள் உன் பெற்றோர். உனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் உள்ளம் பூரித்துக் கிடந்தவர்கள் அவர்கள். பாலப்பருவம் அடைந்த போது பள்ளிக்கூடம் சென்றாய். தவறுகள் நீ செய்து ஆசிரியர்கள் கண்டதில்லை. நீ பொய் பேசிச் சக மாணவர்கள் கேட்டதில்லை. கற்பிக்கும் ஆசிரியருக்கே கை நீட்டிய ‘மக்குபூல்களின்’ மத்தியில் நீ ஆசிரியர்களை மதிக்கின்ற…
