Headlines

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையில் டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறி அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் முன்னேற்றகரமான செயற்பாடுகள்

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையிலான டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறிகளை தேசிய வடிவமைப்பு நிலையம், இலங்கை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கிவருவதாகவும், இந்தப் பாடநெறியில் தேர்ச்சிபெற்றோர் வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் நல்ல சம்பளத்துடன் இலகுவான தொழில் வாய்ப்பை பெற வழி ஏற்பட்டுள்ளதாகவும், நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான் லத்தீப் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிபெற்ற 96பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை…

Read More

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்த ஐ.நாவும் சர்வதேச சமூகமும்  உடன் தலையிடவேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு இராணுவம் நடாத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், சர்வதேச சமூகமும், ஐ.நாவும் மியன்மார்; முஸ்லிம்கள் மீது இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் தெரிவித்துள்ளார். மியன்மார் வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார். சுமார் 400 அல்லது…

Read More

வரலாற்றுப் பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோம். அமைச்சர் றிஷாட் அனுதாபம்

சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியல் வானிலே ஒரு தாரகையை இழந்து விட்டோம். இன, மத பிரதேச வாதங்களுக்கப்பால் நின்று மக்கள் பணி செய்த மாமனிதர் அஸ்வர். பாராளுமன்ற உறுப்பினராய், அமைச்சராய்,…

Read More

ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு வருகின்றது

அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும், இந்திய தனியார்துறையினருக்குமிடையிலே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாக அவர் தெரிவித்தார். அத்துடன் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும், குறித்தளவு அரிசியும் இந்தியாவின் தனியார்துறையிடம் இருந்தே, ஒரு…

Read More

உயர் தேசிய டிப்ளோமா பரீட்சை ஒத்திவைப்பு

ஹஜ் பெருநாள் தினமான எதிர்வரும் 2ம் திகதி  நடைபெற ஏற்பாடாகியிருந்த உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின்;  SLIATE ( ஆங்கில பாடநெறி) பாடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கு இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிலாரி டி. சில்வா தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு பெருநாள் தினத்தன்று இந்தப்பரீட்சையை நடாத்துவதால் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எடுத்துரைத்த…

Read More

மூடிக்கிடக்கும் வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளகட்டியெழுப்ப துரித திட்டம் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

யுத்த காலத்தில் செயலிழந்து போன வடக்கு கிழக்கிலுள்ள கைத்தொழிற்சாலைகளை வெளிநாட்டு உதவியுடன் மீளக்கட்டியெழுப்பி மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாந்தை சோல்ட் லிமிடட்டின் புதிய நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும்,  அந்த நிறுவனத்தின் அரச சுற்றுலா விடுதி திறப்பு விழாவும், நேற்று ஞாயிற்றுகிழமை (27.08.2017) அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போதே, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்…

Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு  அமைச்சர் ரிஷாட்  அழைப்பு

யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று காலை (28)…

Read More

மாந்தை உப்பு கூட்டுத்தாபனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்மாணிக்கப்பகவுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் அந்நிறுவனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு மன்னாரில் இன்று (27) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் எம் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஸ்டேன்லி…

Read More

பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார். பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 324 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் வர்த்தக மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்….

Read More

குருநாகல்  பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு  சூத்திரதாரிகளையும் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடமேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபெயசிறி குணவர்த்தனவிடம்  வலியுறுத்தியுள்ளார். இன்று காலை (27/08/2017) பிரதி பொலிஸ்மா அதிபரிருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், இன்று அதிகாலை நாரம்மல பொல்கஹயாய ஜும்மா பள்ளிவாசல் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலை விபரித்ததுடன் இது தொடர்பில்…

Read More

பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கிராமத்தில் ஆற்றிய உரை

அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுமனே துவேசத்தை தூண்டுபவர்களாக இருந்தால் அவர்களில் நீங்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுர கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நெற்களஞ்சியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் திசநாயக்க தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்நாட்டில் தமிழ் மக்கள் பட்ட…

Read More

பொது அறிவு பரீட்சை 4ம் திகதி திங்கட் கிழமையாக மாற்றம்.  

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 3ம் திகதி நடாத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகயாகையால் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகப்பிரிவு

Read More