Headlines

Dr ஹில்மி தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு ஊர்வளம்





தம்பலகாமம் பிரதேச சபைக்குற்பட்ட முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு சிரமதான பணியில் அ.இ.ம.கா இன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் Dr ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழிப்புணர்வானது அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பெரும் சவாலாக அமைந்திருக்கும் டெங்கு நோயைத எவ்வாறு தடுப்பது என்பது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அமைந்தது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் திருமதி யாழினி, சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச பெரியார்கள், இளைஞர்கள் மற்றும் பாலர் பாடசாலை குட்டிச் சிறுவர்கள் என பலரும் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தார்கள்.

இம்முயற்சியானது ஒரு வெற்றிகரமானதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *