Headlines

குருநாகல் தொலம்புகலவில் மினி ஆடைத்தொழிற்சாலை திறந்துவைப்பு

குருநாகலை மாவட்டத்தின் தொலம்புகல பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை இன்று (18) இணைப்பாளர் அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அ.இ.ம.கா. கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற இஷ்ஹாக் றகுமான் , குருணாகல மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி , சத்தொச நிறுவனத்தின் பிரதி தவிசாளர் நஸீர், ரிதிகம பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் ஜெயரத்ன மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மாதிரிக்கிரமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மஜ்மா கிராமத்தில் செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத் திட்டத்தில் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஓட்டமாவடி பதில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கிராம சேவை அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More

தாய்லாந்திலிருந்தும் ஒரு லட்சம் நாட்டரிசி இறக்குமதி அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமில்லையென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

    தாய்லாந்து 1லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள்ளே தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,; கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 1மெற்றிக்தொன் நாட்டரிசியை 425டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்திலிருந்து அரிசி இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் இலங்கை ரூபாவில் இந்த விலை 65.31ஆகும். இலங்கைக்கு ஏற்கனவே மியன்மார் அரசு 30ஆயிரம் வெள்ளைப்பச்சை…

Read More

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியில் மடுவில் வீட்டுத்திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் முயற்சியினால்  உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் ஊடாக நேற்றுகாலை மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள 15 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான முதல்கட்ட காசோலை வழங்கும் நிகழ்விவு  மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் மீள்குடியேற்ற செயணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் றஹ்மான், முன்னாள் மாந்தை பிரதேசபை உறுப்பினர் ரியாப் மற்றும்  மடு பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர்…

Read More

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி, முழு சமூகத்திற்கும் பாரிய இழப்பு ஜிப்ரி ஹனீபாவின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்

  திஹாரி அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான ஜிப்ரி ஹனீபாவின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி அனைத்து சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சமூதாயத்தில் வலது குறைந்தோர் கவலையின்றியும், நிம்மதியுடனும் வாழும் வகையில், அவரது முயற்சியினால் திஹாரியில் உருவாக்கப்பட்ட அங்கவீன நிலையம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அனைத்து சமூகத்திலுமுள்ள ஊனமுற்றவர்களுக்கும் இந்த நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டது. அங்கவீனர்களுக்கு உதவியதன்…

Read More